என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பதி வேலை மோசடி"
திருப்பதி:
திருப்பதி அடுத்த சோமலா மண்டலம் கந்துகூரு கிராமத்தை சேர்ந்தவர் பாலி செட்டி ரெட்டிபிரசாத். இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைசெய்த போது விடுதியில் தங்க வரும் பக்தர்களிடம் கூடுதலாக பணம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் திருப்பதி தேவஸ்தானம் இவரை வேலையில் இருந்து நீக்கியது.
இதன் பின்னர் இவர் நல்கொண்டா மாவட்டம் சூரியப்பேட்டையை சேர்ந்த சுதாகர் ரெட்டி, கோவர்த்தன் ரெட்டி வெங்கடேஷ், பிரவீன் ஆகியோரிடம் ரெயில்வே அமைச்சர் எனக்கு தெரிந்தவர் அதனால் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.27.5 லட்சம் பெற்று கொண்டு உள்ளார்.
இதேப்போல் திருப்பதியை சேர்ந்த ரவிதேஜா, கிருஷ்ணா, கோபால் ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23.5 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.
நீண்ட நாட்களாக வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருப்பதி கிரைம் டி.எஸ்.பி. ரவிசங்கர் ரெட்டியிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடா நரசிம்மா பாலிசெட்டி ரெட்டி பிரசாத்தை நேற்று கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை கிரிக்கெட் பெட்டிங்கில் கட்டி ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்